Friday 3rd of May 2024 03:00:12 AM GMT

LANGUAGE - TAMIL
.
பொதுத்தேர்தல் பின்னடைவு பின்னணியில் தலைமை மாற்றம் இல்லை: அனுரகுமாரவே தலைவராக தொடர்வார்!

பொதுத்தேர்தல் பின்னடைவு பின்னணியில் தலைமை மாற்றம் இல்லை: அனுரகுமாரவே தலைவராக தொடர்வார்!


ஜே.வி.பியின் தலைமைப் பதவியில் தற்போது மாற்றம் எதுவும் இடம்பெறாது என்றும், அநுரகுமார திஸாநாயக்கவே தொடர்ந்தும் தலைவராகப் பதவி வகிப்பார் எனவும் அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

நடைபெற்று முடிவடைந்த பொதுத்தேர்தலில் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கும் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த முறை அக்கட்சியின் சார்பில் 6 பேர் நாடாளுமன்றத்தில் இருந்தனர். இம்முறை இருவர் வாக்களிப்பு மூலமும், ஒருவர் தேசியப்பட்டியல் ஊடாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

எனவே, ஜே.வி.பியின் தலைமைப் பதவியில் விரைவில் மாற்றம் இடம்பெறவுள்ளது எனவும், புதிய தலைவராக லால்காந்தா நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையிலேயே ஜே.வி.பிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை எனவும், தலைமைப் பதவியில் தற்போது மாற்றம் இடம்பெறாது எனவும் ஜே.வி.பியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE